மார்ச் 2013

காதலியைத் தேடி........


Kaathaliyaith Thedi

இது ஏனோ தெரியவில்லை 
என் இதயம் இன்று வரை  
இரத்தத்தை உடல் முழுதும் 
பரப்பும் வேலையை மட்டும் 
செய்து கொண்டிருக்கிறது...

காதலியைத்  தேடி........

marriage kavithai in tamil | திருமண வாழ்த்துக்கள்

Thirumanam
Thirumana Vaalthu Kavithai


நாதஸ்வர சத்தம் கேட்டு
நான்கு திசைகளிலும் இருந்து 
தென்றல் வந்தது...
திருமண வாழ்த்துச்  சொல்ல....
திருமண வாழ்த்துக்கள்..

சந்தனமும் குங்குமமும் 
மாறி மாறி வாழ்த்துச் சொன்னது
திருமண வாழ்த்துக்கள்..

அறம் பொருள் இன்பம் 
உங்களுக்காக படைக்கப்பட்ட 
தமிழ் வார்த்தைகள்.
வார்த்தை சொன்ன வாழ்த்து இது..
திருமண வாழ்த்துக்கள்..

பொருத்தமுள்ள ஜோடிக்கு 
பூமாலையாக அமைந்ததாக
ஆரவாரம் கொண்ட
பூக்களின் மண வாழ்த்துக்களோடு 
என் மன வாழ்த்துக்களும்....

திருமண வாழ்த்துக்கள்..
பதினாறும் பெற்று 

கிளிப் பிள்ளை | Kilippillai

Kili
kili pillai

பிரசவ வலி அறியாத 
மலடியும் இன்று தாய்.

கிளி ஒன்றை வளர்த்து 
அம்மா சொல்லச் சொல்லி 
பறவையையும் மாற்றினாய்
கிளிப் பிள்ளையாக !

இதோ தாயின் குரல் 
கிளிப் பிள்ளையை நோக்கி...

அம்மா சொல்லு செல்லம் 
அம்மா சொல்லு 
அம்மா!!!




காதலர்களின் முதல் சந்திப்பு


Muthal Santhippu
Muthal Santhippu
தலை சாய்த்த 
நெற்கதிரைப் போல்
நாணம் கொண்ட முகம்.

அழகின் எல்லை அது 
அளவோடு சிவந்து சிரித்த 
நாணம் கொண்ட உதடுகள்

புள்ளி வைக்காத கோலம்
அழகாக போட்ட 
நாணம் கொண்ட கால்கள்.

விரல்களுக்கு இடையே 
பரிமாறப்பட்ட கவிதை சொடுக்குகளின் 
நாணம் கொண்ட விரல்கள்.

நேருக்கு நேர் 
முகம் பார்க்க 
நாணம் கொண்ட கண்கள்.

மஞ்சள் தேகத்திற்கு 
சிகப்பு சாயம் 
நாணம் கொண்ட கன்னங்கள்.

அழகு அழகு 
பெண்மைக்கு நாணம் அழகு 
என்னவளுக்கு 
அது இயல்பான அழகு!







பள்ளி தோழனுக்கு .....


School
Schoomate kavithai
அன்று ஒரு நாள் 
பள்ளிக்கூட வேப்ப மர நிழல்
மதிய உணவு இடைவேளை 
பகிர்ந்தளிக்கப்பட்ட உணவுகள் 
பரிமாறப்பட்ட பாசங்கள்(நட்பு).

ஆம் ! உன் பிறந்த நாளை முன்னிட்டு 
என் ஆழ்மனதில் எழுந்த நினைவுகள்.

நம் நட்புக் கூட்டங்கள் 
ஒன்றாகச் சேர்ந்து 
கேலியும் கிண்டலுமான 
கதை பேசி 
கழிந்த காலங்கள் அவை..
இடை இடையே 
இயற்பியலும் வேதியலும்.

பல சான்றோர்களின் 
நூல்களைப் படித்திருக்கிறேன்
மனித ஜென்மம் பாவம் என்று.
உன்னுடன் பழகிய பின்பு - நான் 
ஏற்றுக் கொள்ளாத வார்த்தைகள் அவை.

கடந்த காலம் திரும்ப வராது
பல முறை பேசிய 
தந்தை பேச்சு உணர்த்தவில்லை.
அன்று ஒரு நாள் 
பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது 
நானும் எனது நண்பனும் என்று 
ஆரம்பிக்கும் எனது உதடுகள் 
உள் மனதுக்கு உணர்த்தியது 
கடந்த காலம் என்னவென்று.

உன் நினைவுகள் 
என் ஆழ் மனதில் 
சற்று ஆழமாகத்தான்
புதையலாக 
புதைக்கப்பட்டிருகிறது.

புதையலை தேடி 
எனது பயணம் 
இன்னமும் 
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அன்று நாம் சாப்பிட்ட 
கைகளின் ஈரம் 
இன்னமும் காயவில்லை
என்பதால்தான் என்னவோ 
இன்று வரை 
உன்னைச் சந்தித்து 
கை குலுக்கவில்லை.

நமது பள்ளிக்கூட 
வேப்ப மரத்து நினைவுகளோடு 
உன்னை மனமார வாழ்த்துகிறேன்.

என் உயிர் தோழனுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்....





Arthamulla hindhu matham | அர்த்தமுள்ள இந்து மதம்


Hindu
Arthamulla Indhu matham


காலம் கடந்து 
நான் தொட்ட பகவத் கீதை.
உண்மைதனை உணர்ந்தேன்
விதியும் மதியும் என்னவென்று.
உன் அர்த்தமுள்ள இந்து மதத்தினால்!

என் காதலுக்குக் கண்ணில்லை
காதலை பொறுத்தவரை
நான் குருடன்தான்- ஆனாலும் 
பள்ளம் மேடு அறிந்து 
பாதையில் பயணிப்பேன்.
உன் அர்த்தமுள்ள இந்து மதத்தினால்!

ஒரு கோப்பையிலே 
உன் குடியிருப்பு - இனி
உன் அர்த்தமுள்ள இந்து மதத்திலே
என் குடியிருப்பு.

கவிதை உலகிற்கும் 
கற்பனை உலகிற்கும்
தத்துவ உலகிற்கும் 
மறையா சூரியனே!
கவிஞர் கண்ணாதாசனே!

அர்த்தமுள்ள இந்து மதம் 
அருளியமைக்கு நன்றி!







vetkam tamil kavithai | நாணம் கவிதை

Vetkam
Vetkam Kavithai



விலை மதிப்பில்லா 
உன் வெட்கங்கள் 
விலை கொடுத்து வாங்கியது 
என்னவென்று தெரியுமா?

பல இளைஞர்களின் இதயத்தை!!!





Nilavu Kavithai | நிலா கவிதை

Night
Nilaa illatha vaanam


என் மன வானில் 
சிதறி கிடக்கும் விண்மீன்களாய் 
எனது தோல்விகள் 
வெற்றி பெற்றவனாக 
ஒற்றை நிலா
தோல்விகளின் அரசன்.

தினமும்  ஒரு வானம் 
நான் படைத்தது கொண்டுதான் 
இருக்கிறேன்.

சில நாள்கள் 
நிலா இல்லாத வானமாக...





kadhal kavithai | கடல்


Kadal
Kadal Kavithai

வான மகள் 
ஆடையின் நிறமாம் 
நீலம் தனை 
பிம்பமாய்
பிரதிபலித்தாய்.
கண்ணாடி இல்லாமல்.

kalapadam | கலப்படம்.......



Kalappadam
Kalappadam
தங்கத்தில்
வெள்ளி கலப்படம்.
என்னவளின் பாதத்தில்
வெள்ளி கொலுசுகள்!

செல்போன் கோபுரங்கள்


Cellphone
Cellphone tower
இறந்த குருவிகளின் 
நினைவு சின்னமாய் 
ஆங்காங்கே  எங்கள் 
கிராமத்து  கழனிகளின் நடுவில் 
செல்போன் கோபுரங்கள்!

திருமணம் எப்பொழுது???


Marriage
Marriage Kavithai


நாளுக்கு நாள் கூடி வரும்
உன் அழகில் 
என் எதிர்காலம் மயங்குதடி!

எதிர்கால கனவுகள் 
நிகழ்கால மூளையில்
நிரந்தரமாய் பதிய ஏங்குதடி!

நமது திருமணம் எப்பொழுது??


மகளிர் தின வாழ்த்துக்கள்!

Makalir thinam
Makalir thina Kavithai


பெண்மையை
தமிழுக்கு இணையாய் ஒப்பிட்டு
தமிழ்த்தாய் பாடிய
சிறு வயது பள்ளி கூடத்திலேயே  
உணர்ந்தேன்.
பெண்மையின் அருமையை!

மகளிர் தின வாழ்த்துக்கள்!




பகு எண் பகா எண்

muyarchi
Paku en pakaa en


என்னை நானே 
வகுத்து கொள்ளும் 
பகா எண்ணாகிய 
என் பெயர் முயற்சி!

பலராலும் வகுக்கப்படும் 
பகு எண்ணாகிய 
என் பெயர் தோல்வி!



தமிழ்!


kavithai
Tamil

தமிழில் உயிரெழுத்தாக 
மாற்றப்படவேண்டிய 
முத்தான மூன்று எழுத்துக்கள் 
தமிழ்!

இதயம் எனும் கருவறை


Ithayam
Ithyam Sirai 

உன் காதணிகள் கவிதை பேச
கூந்தல் அதன் அழகை மறைக்க 
உன் சிரிப்புகள் என்னை கவர்ந்திழுக்க 
என் இருவரி திருக்குறளாகிய 
உன் இதழ்கள் அதை கண்டிக்க 
இதயம் எனும் கருவறையில் 
இதமாக நுழைந்தேன்!

காதலனாய் பிரசவிக்கும் 
காலம் அது எந்நாளோ ?