ஆகஸ்ட் 2013

இவள் பூலாக தேவதை | pooloka thevathai

Penmai
Penmai Kavithai


கண்ணால் காண்பதும் பொய் 
காதால் கேட்பதும் பொய் 
தீர விசாரிப்பதே  மெய்.

இடப்பக்க மூளை பல முறை 
இதயத்திற்கு உணர்த்தியது
விண்ணுலக தேவதையாக இருக்கலாம்.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!

எனது கவிதையின் கருவாக
கன்னி உனது அழகுகள் 
தேவதையின் அழகை போல் 
அமைந்ததால் - கன்னியே  
எனது கவிதை கூட
உன்னை சந்தேகப்பட்டது.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!

எனது உயிர் நண்பனாம்
என் பேனாவின் மை 
கவிதையின் வழியாக 
உன் அழகோடு கலந்ததால்
அவனும் உன்னை சந்தேகிக்கிறான்.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!

இறுதியாக என் மனமும் 
ஆறுதல் அடைந்தது.
உன் கன்னத்தை கிள்ளி
உண்மையை அறிந்ததினால்.
இவள் பூலோக கன்னி அல்ல என்று!
இவள் பூலாக தேவதை!





கவிதையான கனவுகள் | Kavithaiyaana kanavukal

Kanavu
Kanavu kavithai

இரவின் கனவுகளை 
கண்களில் சுமந்து 
விழியோரப் பார்வையால் 
எனக்கு காட்டி 
மொழி பெயர்க்கச்  
சொல்கிறாய்
கவிதையாக!


இன்றைய விவசாயி | Today Farmer

Vivasaayi
Indraiya vivasaayi

கழனியில் முளைத்த 
களைய வேண்டிய
களைகளாய் கட்டிடங்கள்.
களைய முடியாமல் 
இன்றைய விவசாயி!

சேறை சோறாக மாற்றும்
வித்தை தெரிந்து
விவசாயத்தில் 
பாதம் பதிக்க முடியாமல்
இன்றைய விவசாயி!

தன்னிலை மறந்து
நண்பகல் வெயிலில்
கழனியின் நடுவில்
கலப்பைப் பிடிக்கும்
துணிவு இருந்தும்
துணிச்சல் இல்லாமல் 
இன்றைய விவசாயி!

கழனியின் மகள்  
நாற்று வளர்ந்து 
பருவப் பெண்ணாய்
தலை சாய்க்கும் 
நெற்கதிரை காண முடியாமல்
இன்றைய விவசாயி!

காலனின் குறிப்பறிந்து
விளைச்சல் கண்டவன்
மாறி வரும் கலியுகத்தால்
விவசாய வளர்ச்சி காணாமல்
இன்றைய விவசாயி!

மலடியின் கனவில்
ஒரு சுகப் பிரசவமாய் 
விவசாயின் கனவில் 
அமோக விளைச்சலாம்!
கனவு காணும் 
இன்றைய விவசாயி!

கானல் நீரில் தாகம் 
தணித்துக் கொண்டு 
இன்றைய விவசாயி!

விளை நிலத்தின் அருமை
விலை போகும் நிலமாய்
விளைச்சல் தெரியாமல்
விவசாயத்தை வீழச் செய்த 
வியாபாரப் பைத்தியங்கள்
மானுடப்  பணப் பைத்தியங்கள். 
பைத்தியங்களை 
திருத்த முடியாமல் 
இன்றைய விவசாயி!





முதல் சந்திப்பில் | Muthal Santhippu

Mutham
Muthal Santhippu


உன் முதல் பேச்சு 
என் தேசிய கீதமாய் 
எழுதிய உன் உள்ளம்
உச்சரித்த உன் உதடுகள் 

தேசப்பற்று  மிக்கவன் நான் 
மறப்பதில்லை தேசிய கீதத்தை!

பெண்மைக்குள் ஓர் பெருமை 
புரிந்து கொள்ள முடியாத 
இன்னொரு பெண்மையாய் 
உனது கருவிழி கண்கள்!

உன் விழி பேசி நான் 
மறந்த வார்த்தைகளால்
நானும் அழகாய் தெரிந்தேன் 
உன் முக அழகின் எதிரொளிப்பில்!

மழலையாய் நீ சிரிக்க
மயங்கிய கருவிழியில் 
இமைக்க மறந்த இமைகள்.

இலக்கணப்பிழை  இல்லா 
எழுத்துப்பிழை இல்லா 
பெண்மை இலக்கணம் நீ!

பல்லக்கில் பவனி வரும்
கவிதை ராணி நீ!
தமிழுக்கு ஓர் கவிதை
இல்லை இல்லை 
தரணிக்கோர் கவிதை
உனது பெயர்.

கற்பனை மறந்த சிந்தனை 
கவிதை வடித்தது 
நிஜ உலகில் உன்னோடு
அந்த முதல் சந்திப்பில்!