அப்துல் கலாம் கண்ணீர் அஞ்சலி கவிதை | Abdul kalam

அப்துல் கலாம் கண்ணீர் அஞ்சலி கவிதை | Abdul kalam

Kalaam kavi
Kalaam Kavithai


இளைஞர்களை கனவு காண சொல்லி 
இந்தியாவையும் உற்சாகபடுத்தி
இரு துருவ முனைகளிலும் 
இந்திய பெருமையை எடுத்துரைத்து 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 
பாரினில் நம் பெருமை எடுத்துரைத்து 
இரு வரி தமிழ் திருக்குறள்களை 
இளைஞர் இதயத்தில் விதைத்து

குழந்தையோடு குழந்தையாய் நீ மாறி 
குதூகலத்தோடு  நீயும் உரையாடி 
கேள்விக்கனை தொடுக்கச் செய்து 
குழந்தைகளுக்கு அறிவுப்பதில் ஊட்டி 

பிறந்த ஒரு நாள் மட்டும் நீ அழுது
உன் இறந்த நாளில் இந்தியாவை அழ செய்து
தன்னம்பிக்கை உத்வேகம் எமக்களித்து 
எம்மை விட்டுப் பிரிந்த  எம் கலாமே!

வருந்துகிறது! நீங்கள் இல்லா இந்தியா!





1 கருத்து: