Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்

உயிரே பதிலாய் --


                                    உருவமில்லா காற்று
                               அங்கும் இங்கும் அலைகிறது
                                உருப்படியாய் என்ன செய்தது
                                   உதடுகள் கேள்வி எழுப்ப
                                நுரையீரல் பதில் சொல்லிற்று
                                உயிர் கொடுக்கும் ஆக்சிஜன்
                                    அவன்தான் என்று!








சுய ஒழுக்கம்

Suya olukkam


 தவறான உறவுகள் தள்ளி விட 
தடுமாற்றம் இயல்பு 
தடம் மாறுவதுதான் தவறு.
நல் எண்ணம் காந்தமாய் 
நல் எண்ணத்தை இழுக்கும்!
நல் எண்ணமே தேவை!

எல்லாமே என்னிலும் உண்டு 
உன்னிலும் உண்டு
சகலமும் உற்பத்தியாகிறது 
உன் சிந்தனையிலும் 
உன் எண்ணத்திலும்!
தனிமை மௌனமாய் 
சொல்லி விடுகிறது 
நீ யார் என்று !..
தனிமை உன் கேள்விக்கான பதில்!

தவறிய ஒன்று பெரும்பாலும் 
இயல்பு நிலை அடைவதில்லை 
தவறிய கண்ணாடி உடைகிறது 
தவறிய வார்த்தைகள் 
மனதை உடைக்கிறது ...
தவறாமல் இருக்க 
தவறா கவனம் வேண்டும்!

காலம் மாறுகிறது 
நேரம் மாறுகிறது 
காலத்திற்கு ஏற்ற மாற்றம் 
கண்டிப்பாய் தேவை
மாறாத மாற்றம் 
தனித்து விடப்படுகிறது 
நேர்மை ஒன்றே மாறாத ஒன்று!

சுவாசம் ஆயுளை நீட்டுகிறது 
வார்த்தை மதிப்பை கூட்டுகிறது 
காதல் அன்பை பகிர்கிறது 
எண்ணம் வெற்றியை ஈட்டுகிறது
சுய ஒழுக்கமே வடிவம் கொடுக்கிறது! 


விழிகள் (இரண்டு) போதை




 நித்திரை போதையோடு 
நம் காதல் போதை சேர 
இரு விழிகளுக்கு எல்லாமே
இரண்டாய் தெரிந்தது
இரு விழியோடு 
இரு போதையோடு 
இன்று உனக்காய் எழுதியது!

இரண்டு என்று உச்சரித்தால் 
கடினம் திண்மை உணர்ந்தேன் 
இரண்டை பார்த்தாலும்
மென்மை உணர்ந்தேன் 
விரல் தொட்டாலும்
மென்மை உணர்ந்தேன்! 

சுற்றிலும் வெண்மை 
வெண்மையின் நடுவினில் 
வெண்மையின் எதிர்பதம் 
இல்லை இல்லை 
பூக்களின் நுனியில் மொட்டு
மேட்டின் உச்சியில் கட்டெறும்பு!

உச்ச கட்ட  அழகை மறைக்க
இயற்கை இயல்பாய் 
அரண் அமைக்குமே!
மறந்தேன்...
இங்கே செயற்கை அரண் 
திரை சீலை அழகின் அரணாய்!
இல்லை இல்லை இங்கே 
இமைகள் இயற்கை அரண்
திரை சீலையை நினைத்து  
இமைகளை மறந்தேன்!

நம் கவிதையை உன் இதழால்
சுவைத்துக்கொண்டே 
உன் இரு விழிகள் என்னை நோக்க 
பார்வையின் அர்த்தம் நான் அறிந்தேன் 
இரண்டு விழியால் முறைக்கிறாய் 
ஏன் என்று நான் வினவ 
எண்(ன்) இரண்டு ராசி எண்ணா?
இரண்டு விழியின் மேல் 
என் இவ்வளவு ஏக்கம் ?
சரியாய் ஒரு காதல் சூடு இட்டாய்!

காதல் சூடு எப்படி என்று நீ சீண்ட 
பதில் சூடு நீ வேண்டுகிறாய்
ஆதலால் இன்னும் ஓர் கவி உனக்கு 
இரண்டு மட்டும் அல்ல 
எண் ஒன்றும் எனக்கு ராசிதான்! 

இயல்பாய் எழுதுவதை - உன் 
இதழால் இயல்பாய் வாசிப்பாய்
இரு அர்த்தம் புரிந்து கொள்வாய்!
இறுதியில் நாணம் 
இதழ் திறக்காமல் இதழ் சிரிப்பு 
இதுவே கவியின் முடிவுரை!




தாய்மை பூக்கள்

தாய்மை பூக்கள்



முகம் மலர்ந்தால் 
காதல் பூக்கிறது!
இதயம் மலர்ந்தால் 
நட்பு பூக்கிறது!
இரண்டும் சேர்ந்து 
ஒரு இதயத்தில் மலர்ந்தால்
தாய்மை பூக்கிறது!


கதிரவனுக்கு விடுமுறை

கதிரவனுக்கு விடுமுறை





கதிரவன் விடுமுறை நீடித்தால் 
வெண்ணொளி வீசும் நிலவொளியாய் 
அவள் முகம் கனவில் நீடிக்கும்!
கதிரவனே! ஓய்வெடுப்பாயாக!

பகல் நேர நித்திரை விழி தட்டினால் 
கனா களையும் என்றெண்ணி 
கனவோடு பயணிக்கும் அவள் 
இரு விழியில் ஒரு  இமை கூட 
திறக்க அனுமதி அவள் அளிப்பதில்லை!

குருதி தள்ளும் இதயம் 
காதலையும் சேர்த்து தள்ள 
இதயம் கொடுக்கும் தைரியம் 
இதழுக்கு இல்லை!
இறுக பூட்டி கொள்கிறது 
காதலை சொல்லாமல்!

கனவில் எல்லாம் சாத்தியமாகிறது - ஆதலால் 
வறண்ட வானிலை இன்று என்று 
கதிரவனே! வானிலை அறிக்கை
வானில் இருந்து தூக்கி எறிவாயாக!
இன்று என் கனா தொடரட்டும்!



எளிதாய் எழுதியது

எளிதாய் எழுதியது




 எட்டாத உன்னை
எழுத்தில் அடைக்க 
எட்டி உன் முகம் பார்த்து 
ஏட்டில் எழுத 
எண்ணமெல்லாம் சிறை பட 
எளிதாய் எழுதினேன்!
எனது நிலா கவிதையை!



உலக காபி தின வாழ்த்துக்கள்




நடை பாதை காபி 
நடை மேடையை அழகாக்க 
சற்றே தள்ளி நில்லுங்கள் 
சலனமின்றி சொல்கிறது 
இரவுகளை அழகாக்கிய 
இரவு நேர காபி!

நிறவெறி எனக்குள் இல்லை 
அரவணைக்கிறது 
தன்னோடு இணைய வரும் 
பாக்கெட் பால்தனை!
கறந்த பாலுக்கும் அடைக்கலம்!
பாக்கெட் பாலுக்கும் அடைக்கலம்!

ஆடையோடு சில காபி 
அம்மணமாய் சில காபி 
ஆவி பறக்கும் சில காபி
ஆனால் எல்லா காபியிலும் 
ஆனந்தம் ஆர்ப்பரிக்கும்!

பருவநிலை குளிரை 
மனம் சுவைத்து பருகிட 
ஏதோ ஓர் உணர்வு 
கரு நிற காப்பியாய்
கரங்களில் அமர்கிறது!
இதழ் சுவைக்கிறது 
இதயம் போதை கொள்கிறது! 

உனக்கு உரு கொடுத்து 
உயிரும் கொடுத்து 
காபி என்றொரு பரிணாம வடிவம்
கரங்களால் கொடுத்தேன்!
உனக்கு வரமும் கொடுத்து 
உனது அடிமை நான் ஆனேன்!
எனது போதை நீ ஆனாய்!
காபி வித்துக்கள் 
போதை மாத்திரைகள்!

நட்போ காதலோ 
சந்தித்துக் கொண்டால் 
சற்றே காபி அருந்துங்கள் 
கோப்பை காலி ஆகி 
மனம் நிறைந்து இருக்கும்!
புது உலகம் பிறந்திருக்கும்!

பகல் நேர கதிரவனும் சரி 
இரவு நேர நிலவும் சரி 
பல யுகங்கள் தொடர்கிறார்கள் 
எந்த காபியை அருந்துகிறார்கள் 
என்றுதான் தெரியவில்லை!

இன்னொன்று இங்கே தெரிகிறது 
துளியும் சிதறாமல் 
கதிரவன் காபி அருந்த
கதிரவனில் கறை இல்லை!
சுடும் கதிரவன் கூட்டல் சுடும் காபி 
கணக்கு சரி! ருசியும் சரி!

சில துளி சிதற விட்ட நிலாவோ 
இங்கே சற்று சறுக்கல் அடைய 
வெண் ஒளியின் எதிர்பதமாம் 
நிலவின் கறை அழகின் கிறுக்கல்!
சுடும் காபி கூட்டல் குளிர்ச்சி நிலா 
கணக்கு தவறு! விடை கறை!

உலகை வழி நடத்த
அமைதியாய் அறிவியலும் 
ஏதோ ஓர் மூலையில் அமர்ந்து 
காபி பருகதான் செய்யும்!
அது இடைவேளை காபியா 
இல்லை இடைவிடா காபியா 
என்றுதான் எந்த மானுடர்க்கும் 
தெரிவதில்லை, புரிவதில்லை!

உலக காபி தின வாழ்த்துக்கள்!



எட்டாத காதல் இனிக்கிறது

Kaathal
Ettatha Kaathal


எட்டாத காதல் 
எள்ளவும் திகட்டுவதில்லை 
ஏனோ தெரியவில்லை 
எட்டாத காதல் 
என்றுமே இனிக்கிறது !
ஏனோ தெரியவில்லை

என்றென்றும் சொல்லும்
எல்லா பொய்யினிலே 
எல்லாமே தெரிகிறது
எட்டாத காதல் 
ஏன் இனிக்கிறது என்று! 

வியர்வையும் கண்ணீரும்

வியர்வையும்  கண்ணீரும்


கவலைகள் எல்லாம் வியர்வையாக!
காதல் நினைவு கண்ணீராக!
அவளை மறக்க நினைக்கையில் 
இடைவேளை எடுக்க வில்லை 
வியர்வையும்  கண்ணீரும்!

சின்ன வீடு

Chinna Veedu
Chinna Veedu


மலர் மாலை மாற்றாமல் 
மண வாழ்க்கை காண துடிக்குது  
எழுதிய கவிதைகள் எல்லாம்! 

இரவு நேரத்து இசைகள்

இரவு நேரத்து இசைகள்
இரவு நேரத்து இசைகள்


இரவில் எழுப்பி விடும் 
இசைகள் சுகமாய் செய்கிறது 
கணக்கில்லா இம்சைகளை !

பாதங்கள் இல்லா ராகங்கள்
பறந்து வருவதில் ஆச்சர்யமில்லை!
ஒற்றை சிறகும் இல்லாமல்
பறந்து வருவதுதான் ஆச்சர்யம் !

மனித குயில்கள் இசை அலையில்
மயங்காமல் தவழ்ந்து வரும்
மனித செவிகள் அதில் மயங்கும்
விழி திறந்து மயங்குதல் ஆச்சர்யம்!

வாழை மடல் ஏறிய பாதங்கள்
வழுக்கி விழுதல் இயல்பு நிலை
இதய குழலில் படிந்த இசைகள்
தாலாட்டு பாடுவது ஆச்சர்யம்!

சொல்லாத காதல் எல்லாம்
இரவில் சுக இம்சைகள் புரியும்
மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்
சுக இம்சை புரிவது ஆச்சர்யம்!

இரவுகள் நீடித்தால் பல காதல்கள்
தன முழுமை நிலை அடைந்து விடும்
இரவு நேரத்து இசை கேட்டும் - நாம் எல்லோரும்
கவிஞன் ஆகாதது ஆச்சர்யமே!




இந்த நாள் இனிய நாள்

இந்த நாள் இனிய நாள்
இந்த நாள் இனிய நாள்


பாதங்கள் இல்லா இரவுகள் 
மெதுவாய் நடை போட
மேகத்தை விலக்கி 
நிலவை அடைந்தேன்!
உன்னால் - இந்த நாள் இனிய நாள்!

கடந்து போன நேரங்களை 
கடக்க போகும் நேரங்களை 
அருகே பிடித்து அமர வைத்து 
ஆணி அடித்து இருக்கச் செய்தாய்!
உன் நினைவுகளை மலர செய்தாய்!

இதழ் திறந்து இடை விடாமல் நீ பேச 
இதயம் திறந்து  இடை விடாமல் நான் பேச 
உன் மொழி நான் புரிந்தேன் 
என் மொழி பேச்சு மெதுவாய் நீ புரிவாய்!

இரு சக்கர வாகனத்தில் பயணித்து 
இரண்டு துருவத்தையும் தொட்ட உணர்வு 
இருந்தும் கேட்டுக் கொண்டேன் 
இவ்வளவு நேரம் வாகனத்திலா பயணித்தோம்?

அருகே அமர்ந்து இலக்குகள் இல்லா 
இடைவிடா பயணம் உன்னோடு!
எதிர் காற்று முகத்தில் மோத 
உன் இதயத்தின் அரணாய் என் இதயம்!
உன் இதயம் பின்னே ! என் இதயம் முன்னே!

நியாபக மறதி நான் அறிவேன் 
மயக்க நிலையும் நான் அறிவேன் 
காதல் நட்பு நிலையும் அறிவேன் - ஆனால் 
நம் நிலை நான் அறியேன்!

களங்கமில்லா இதயத்தோடும் பேசுகிறாய் 
சிந்தித்து மூளையோடும் பேசுகிறாய் 
உன் முழு குழப்பமாய் நான் இருக்க 
உன் இதயம் பேசினால் உன் இதழுக்கு தண்டனை!

எதிர்பார்த்து தேடிய முடிவிலி அன்பு 
கரம் தொட்டதாய் உணர்ந்தேன் 
கரம் தொட வேண்டும் என்றேன் 
இதயமும் இதழும் சேர்த்து முறைத்தாய்!

எங்கு சென்று முறையிடுவேன்
உன்னைத் தவிர எவர் உண்டு 
தவறுதலாய் வேண்டுகோள் இட்டேன் 
வந்த கவிதைகள் எல்லாம் ஓடி விட்டன 
கவிதை இல்லா வெற்றுக் காகிதமாய் நான்!

எதில்தான் கவிதை இல்லை 
உன் மூச்சிலும் உண்டு பேச்சிலும் உண்டு
என் இதயம் நிரம்ப கவிதையாய் நீ இருக்க 
வெற்று காகிதமாய் நான் இல்லை 
என் இதயம் முழுக்க கனத்த கவிதையாய் நீ!

நம் அகமும் முகமும் சந்தித்து 
கடந்து போன அந்த நாள், என் இனிய நாள்!
இல்லை! இல்லை! நம் இனிய நாள்!




இதழ் திறந்த பூக்கள்

இதழ் திறந்த பூக்கள்
இதழ் திறந்த பூக்கள்


இதழ் கண்ட மொட்டுக்கள் 
இதழ் திறந்து 
பூவிதழாய் மலர்ந்தனவோ ?

அன்னையர் தின கவிதை

அன்னையர் தின கவிதை
அன்னையர் தின கவிதை


உலக அகராதிகள் பாசம் என்றால்
உன் பெயரை முதலில் பொழியும்
உயிரைப் பிரித்து இன்னொரு உயிராய்
உலகிற்கும் உறவிற்கும் கை கொடுப்பாய்!

உனக்கென தனியாய் ஓர் சிந்தனை
உன் மனதை ஆட் கொண்டிருக்காது
உன் உறவைத் தவிர ஓர் சிந்தனை
உன் மனதில் துளியும் இருக்காது!

உன் முன்னுரையும் முடிவுரையும்
உறுதியாய் சொல்லலாம் உனக்கானதல்ல
உறுதியாய் சொல்லும் அனைத்தும்
உனது உறவை உறுதியாய் நிலை நிறுத்தும்!

நல்வார்த்தை நிதமும் நீ தருவாய்
உன் வேதனை ஏனோ தினம் மறப்பாய்
என் உள்ளம் மெலிய நிலை நேர்ந்தால்
உன் உயிரையும் விட்டு மீட்டிடுவாய்!

பத்து மாதம் அல்ல 
முடிவிலி சுமையாய் இருந்தாலும் 
சுமந்து இருப்பாய்!
முகம் காணாதிருந்தாலும்
முகம் சுளிக்காமல்
முதுகு வலி தாங்கிக் கொண்டே 
முடிவிலி எண்ணிக்கையில் 
முத்தங்கள் கொடுத்து இருப்பாய்!

அன்பை அளவிட நினைத்தேன் 
எல்லை அதற்கு இல்லை என்றெண்ணி 
கை விடும் நினைப்பை விதைத்தேன்
விதைத்த நினைப்பு மாறி முளையிடவே 
அறிந்து கொன்டேன் - அன்னை இவளே 
அன்பின் முடிவிலி இந்த அகிலத்தில்!

முதல் கவிதை எழுத முயற்சித்தால் 
உன் அன்னையை நினைத்து விடு 
கவிதை கடலென ஆர்ப்பரிக்கும்.
என்ன ஒரு ஆச்சரியம் என்றால் 
கவிதையில் கற்பனை கலப்படம் 
துளி அளவும் கலந்திருக்காது!

அன்னையின்  முன்னே 
சொல்லக் கூடாத உண்மை 
எனக்கு பசிக்குது அம்மா!
சொல்லக் கூடாத பொய் 
நான் சாப்பிட்டேன் அம்மா!
மீறியும் சொல்லி பாருங்கள் 
அன்னையின் அர்த்தம் அறீவீர்கள்!

இதழ் கடித்து விழி உருட்டி
மிரட்டுவதில் இவள் கெட்டிக்காரி 
என் இதழ் மட்டும் அல்ல 
இதயமும் சேர்ந்தே சிரிக்கிறது!
தினமும் இதழும் சிரிக்கிறது 
இதயமும் சிரிக்கிறது!

வான் உச்சிக்கு வந்த சூரியன் 
கதிர் மூலம் என்ன சொல்லியதோ 
தெரியவில்லை
என் பிள்ளையை காணவில்லை 
புலம்பியபடி ஒரு தேடுதல் வேட்டை!
தெரு வீதிகழும் சந்தும் 
இவள் பாசம் அறியும்!

மணி அடித்தால் சோறு
இது அம்மாவின் பாச ஜெயில்!
பல நேரங்ககளில் 
மணி அடிக்காமழும் சோறு!
பசி என்னும் இரண்டெழுத்தை மறந்தேன் 
பசித்து உண்ணுதலையும் மறந்தேன் !

இவளுக்கான உணவை 
இரவுகள் எடுத்து வைக்கிறது 
எஞ்சிய உணவுகள் 


உயிர் பெற்ற பூக்கள்

உயிர் பெற்ற பூக்கள்
உயிர் பெற்ற பூக்கள்


மாலையில் உயிர் விட்ட பூக்கள் 
பூமாலையில் உயிர் பெற்றன 
கோயில் சிலையில் பூமாலைகள்!

எல்லை அது இல்லை | pookkal kavithai --

எல்லை அது இல்லை
எல்லை அது இல்லை


மொட்டுக்களை இதழ் உறிஞ்ச
மொட்டுகளுக்கு இனிக்கிறது 
இதழுக்கு வலிக்கிறது!

முனகல்களில்  சுக வலி அறிந்து 
முறித்து விட முயற்சிக்க 
கரங்களோ தலை கோதுகிறது!

இடம் மாறும் இதழுக்கு
இடைவெளி சிறு தாண்டி
இன்னும் ஓர் மொட்டு மலர்கிறது!

உணர்ச்சி உள்ள பூவிது - ஆதலால் 
கசங்கல்களை புறக்கணிக்கிறது 
கனவுகள் நினைவு ஆகுவதால்! 

பூக்களில் இது 
சற்று வித்தியாசம்தான் 
பறித்திடவே ஏங்குகிறது!

மெலியாத இயல்பான சிறிய இடையை
விரல் நுனி விழி கொண்டு
உற்று நோக்கி தழுவுகிறது!

வியர்வை ஈரத்தில் இதழ் நழுவ
இன்னும் சுக தேடுதல்
அவள் ஒரு தொடர் கதையாய்!

பூக்களின் நுனியில் மொட்டுக்கள் 
பூமேனியில் இது அதிசயம் - ஆதலால் 
எல்லை தவுறுதல் சாத்தியம்!

எல்லை அது இல்லை!...!..!




வானத்து நிலா

வானத்து நிலா
வானத்து நிலா

மழை முத்தமிட்டோ 
வெயில் கோபப்பட்டோ  
வானத்து வீட்டில் 
தொங்கும் வெள்ளியொன்று 
கருத்து விட்டது!


காதலர் தின கவிதை - பிப்ரவரி - 14

காதலர் தினம்
காதலர் தின கவிதை

ஆரம்பம் முடிவு விழியில் தெரியா  
ஆராய்ச்சியிலும் பிடிபடா 
காலாவதி பெயரளவிலும் இல்லா 
காலம் கடந்தும் வாழ்ந்தும் வாழ்ந்திட்ட
வாழ்ந்து கொண்டிருக்கும் காதலே!

மெதுவாய் சுகமாய் நீ என் இதயம் தொட 
என் கரமோ காதல் கவிதை தொட 
நழுவி விட்டன  கவி வார்த்தைகள்
எட்டிப் பிடித்து கரம் கொடுத்தாய்! - காதல்
கரமும் பிடித்தேன்! கவிதையும் பிடித்தேன்!

உதிக்கும் சூரியனும் மலரும் நிலவும் 
புரியாத வார்த்தைகள் தினம் சொல்லும் - காதலே
என் விழி நோக்கி விளக்கவுரை சொல்வாய்!
கண்டதெல்லாம் புரிகிறது
காதல் மட்டும் புரியவில்லை - இருந்தும்
காதலிக்க தகுதி உன்னால் பெற்றேன் !

எத்திசை தேடினும் நிலவாய் காதலி முகம்
நேர் எதிரே எதிரொலி எதிரொளியாய்
காதலே ! எல்லாமே உன் மாய ஜாலம்!
காதல் என்றால் சும்மாவா ? உலகமே குலுங்கும்!
வான் புவி எத்திசை நோக்கினும் காதலே!

தனிமை சற்று கிடைத்தால் 
தானியங்கி ஒலி பெருக்கியாய் 
இரு வரி இதழ்கள் மாறும்!
இலவச இணைப்பாக 
இதழ் சிரிக்கவும் செய்யும்!
எல்லாமே காதல்/காதலியின் பரிசு!


மாலை மயங்கும் சூரியன் 
காலையில் விழிக்கும் 
பொழுது மறைந்தாலும் 
பொழுது மலர்ந்தாலும் 
காதலர்கள் விழிப்பதில்லை!
விழிக்காமல் இருப்பதில்
வியப்பு ஏதும் இல்லை!

மாலை கருக்கல் மலர வேண்ட
கதிரவனை வழி அனுப்பி 
சில மனது கவிதை தேடி 
காதலி முகம் அதில் காணும்!
கவிதை அறியா மனது 
கனவில் கால் பதிக்கும்!
கவிதையும் கனவும் 
காதலின் இரு கண்கள்!

முழு நிலவு வானில் தொங்கும் 
எதிரொளி நிலவு கடல் அலையில் 
அங்கும் இங்கும் சிதறும்!
வேடிக்கை பார்க்கும் முழு நிலவு 
உன்னத சுகம் அதில் காணும்!
காதலை விளக்கியாயிற்று!

தினம் ஓர் இன்பம் கிடைக்கும்
அந்த இன்பத்திற்கு பெயர் சூட்ட 
மனமும் மூளையும் தடுமாறும்!
இந்த இன்பமும் தடுமாற்றமும் 
இறுதி ஆயுள் வரை வேண்டுமா?
எனில் - காதலித்துப் பாருங்கள்! 


வாழ்க காதல் ! வளர்க காதலர்கள்!

காதலர் தினத்துக்கான இன்னும் ஓர் கவிதை படிக்க லிங்கை கிளிக் செய்யவும்...





குடியரசு தின கவிதை | Kudiyarsu thina Kavithai

Kudiyarsu thinam
Kudiyarsu thina kavithai


இடைவெளி இல்லா காற்றாய் 
பாரதம் எங்கும் சமத்துவம் தொடர 
நகருகின்ற தனி ஊசலாய் 
சம உரிமை தொடர்ந்து நீடிக்க 
காலம் காட்டும் கடிகாரமாய் 
அனைவருக்கும் ஒரே சட்டம்!


அன்று முதல் இன்று வரை 
முடிவை எட்டா தீப ஒளியாய் 
வேற்றுமையில் ஒற்றுமை 
நம்மோடும் நம் உணர்வோடும் 
தினமும் பயணம் செய்ய 
வழி வகுத்த அரசியல் அமைப்போடு 
அனைவரும் பயணிப்போம்!

இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!







இழப்பில் மகிழ்ச்சி | சிகரெட் கவிதை

நழுவிய சிகரெட்
நழுவிய சிகரெட் 

விரல் நழுவிய சிகரெட் 
விரக்தியில் விழிகள் 
மகிழ்ச்சியில் நுரையீரல்!







tamil christmas songs | தமிழ் கிறிஸ்துமஸ் பாடல்

Christmas
Tamil Christmas song

அகரத்தின் அகரமே, இயேசுவே
உலக அகரத்தில் நீ அகரமே!

இதழ் படிக்கும் பைபிளிற்கு நீயே அகரம்
படித்து உணரும் இதயத்திற்கும் நீயே அகரம்
நகரும் உலகிற்கு உந்தன் ஒளியே அகரம் - (2)
தடம் பதிக்க வரும் எல்லா கருவுக்கும் நீ அகரம் 
அகரமே, அகரமே, நீயே அகரமே! (2)

உருகும் அன்புக்கு உலகில் நீயே அகரம்
உருவாகும் அன்புக்கும் நீதான் என்றும் அகரம்
உன்னதங்கள் எல்லாவற்றிலும் நீதான் அகரம் 
அதை காத்திட துடிப்பதில் நீதான் அகரம் - (2)
அகரமே, அகரமே, நீயே அகரமே! (2) இதழ் படிக்கும்

தாய் தேற்றும் அன்புக்கு உந்தன் அருளே அகரம்
தவமாய் தந்தை அருளும் வலிமைக்கு நீயே அகரம் 
குதூகலமாய் குடும்பம் காரணம் நீதான் அகரம் 
உன் அகரத்தின் துணையாய் உன்னோடுதானே என் அகரம் - (2)
அகரமே, அகரமே, நீயே அகரமே! (2) இதழ் படிக்கும்









Birthday kavithai in tamil | காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து

birthday
birthday kavithai in tamil


பூமியில் பிறந்து
நிலவில் மோதி
எதிரொலித்த - உன்
பிறந்த நாள் வாழ்த்துகளில்
என் வாழ்த்தும் ஒன்று !
அதுவும் முதன்மையான ஒன்று!







கட்டாய மின் தடை

Power
Minthadai

பூமிக்கும் வானுக்கும் 
கட்டாய மின் தடை 
அமாவாசை நாளில்! 

பைத்தியக்காரன்

Paithiyam
Paithiyakaaran Kavithai


பாதங்கள் வகுத்த வழியோடு
வலிக்காமல் பயணித்து
உடல் சொல்லி அமர்வது என் வழக்கம்!

சில நேரம் காதல் கொண்ட வாழ்க்கை
சில நேரம் உதறிய உறவுகள் - என்னை 
தனிமையில் உலவ வைக்கிறது!

சில நேரங்களில் சாப்பாடு பிச்சையாக 
சில நேரங்களில் தானமாக 
சில நேரம் விதி உடன் வருவதில்லை!

உலகத்துக்கு என்னை பிடிக்கவில்லை 
எனக்கும் உலகம் புடிக்கவில்லை 
பூமிக்கு தத்துப் பிள்ளை - ஆதலால் 
விட்டு வைத்திருக்கிறது!

அழகை மயக்கும் ரோஜாவும் தெரியும் 
பகையை முடிக்கும் கூர்முனை கத்தியும் தெரியும் 
காதலும் பகையும் தெரிவதில்லை!

இரவில் தாய் மடி தேடி அலைந்தேன்
தேடலில் எதுவும் எட்டவில்லை 
சாலையோர மேடையே இறுதியில் தாய் மடியாய்!

நான் உளறுவது பிற விழிகளுக்கு தெரியும் 
நான் அழுவது எனது விழியில் புலப்படாது 
பைத்திய மனஙகள் மனதுக்குள் அழுகிறது!

பனியும் வெயிலும் பாடம் நடத்தின 
கிழிந்து போன என் கந்தல் துணிக்கு 
எந்த பாடமும் விளங்கவில்லை!

கண்ணீர் வந்தே தேய்பிறையானேன்
மதிப்பில்லா என் கண்ணீருக்கு
வளர்பிறை என்ன தேய்பிறை என்ன ?

எல்லை என்று சொல்வது எதிலும் உண்டு 
எண்ணில் அந்த எல்லையை தேடினேன் 
எட்டாத என் எல்லையை என்னவென்று சொல்ல !

வயிறு பசித்தால் சாப்பாடு 
தாகம் எடுத்தால் தண்ணீர் 
பஞ்சத்திற்கு வளைந்தது என் உடல்!

இதுவும் கடந்து போகும் என்ற 
பொருந்தாத வார்த்தையுடன் அழுகிறேன் 
கடைசிவரை பைத்தியக்காரனாய்!












ரசிகர்கள் அல்ல வெறியர்கள்

Cinema
Cinema Veriyarkal


சினிமா என்றால் பொழுதுபோக்கு 
மறந்து விட்டது பல பேருக்கு 
சிந்தனை எல்லாம் மழுங்கி இருக்கு 
விழிக்காத மூளை மயக்கத்தில் இருக்கு!

நடித்தவன் உச்சியில் இருப்பான்  
ரசித்தவன் எங்கே இருப்பான் 
ரசித்த போதை தெளிந்து விடும் 
வெறி கொண்ட போதை கூடி விடும்!

முதல் முறை திரை நோக்க 
சில நூறு ரூபாய்கள் 
இரண்டாம் முறை திரை நோக்க 
சேமிப்பதில் அரை குறைகள்!

நடிகனின் முகத்தில் முகத்திரை - அதை 
அறியாத மனதில் மனத்திரை 
முகத்திரை விலகி விடும் 
மனத்திரை ஒட்டி விடும்!

அரசியலுக்கு சினிமா முதல் படி  
ரசிகனுக்கு அதுவே கடைசி படி 
இனி இங்கு இல்லை வேறு படி 
எப்படி வாழ்வது முறைப்படி!

திரை வடிவில் மனம் கெட்டான்
இனி எதன் வடிவில் அதை மீட்பான் 
மனமும் திரையும் ஒன்றல்ல 
மனம் முன் திரை பெரிதல்ல!

அஜித்தும் நடிகரே விஜயும் நடிகரே
ரசிகன் இருவரையும் ரசிக்கிறான் 
வெறியன் ஒருவரை துதி பாடுகிறான் 
இவர்கள் ரசிகர்களே அல்ல வெறியர்கள்!










சிறகுகளுக்காய் ஓர் ஏக்கம்

Siraku
Sirkukal



சிறகுகள் கிடைத்து 
வானம் பக்கமாகும்
அந்த நாள் எந்த நாளோ ?

கிடைத்தே தீரும்

Kidaithal
Kidaithe Theerum

உதவி இல்லாத சூழல் 
ஒரு பொழுதும் நேராது 
நம்பிக்கை இல்லாத சூழல் 
ஒரு பொழுதும் வாராது!

செய்து விட்ட புண்ணியங்கள் 
பலன் தராமல் போவது இல்லை
செய்து விட்ட பாவங்கள் 
கை விட்டுப் போவது இல்லை!

கைக்கு எட்டாத காதலியை நினைத்து
எழுதிய கவிதைகள் பலம் பெறும்!
எட்டாத வெற்றியை தொட்டு விட
எட்டும் முயற்சிகள் தோற்பதில்லை!

விழி கசிந்த கண்ணீரில்
மெய்மை சுரந்திருப்பின்
வருங்காலம் பதில் சொல்லும்!
காலம் நீளலாம், பொய்மை நீளாது!

நிமிர்ந்து நிற்பது தைரியம் என்று
தோள் நிமிர்த்தி சொல்பவர்
வளைந்து கொடுப்பது பலகீனம் என்று
தவறிய சொல் வழி நடப்பர்!

அறிவாளி என்று தன்னை  உணர்ந்தால்
முட்டாளாய் முன்னோக்கி செல்வாய்
விதியானாலோ அறிவினாலோ
கிடைப்பவை நிச்சயம் கிடைத்தே தீரும்!








காட்சிப் பிழை

Tharai
Kaachip Pilai


சரி செய்ய முடியாத 
காட்சிப் பிழை 
தரை தொடும் வானம்!




கிருஷ்ண ஜெயந்தி கவிதை

Krishnar
Krishna Jeyanthi Kavithai


கீதையின் குருவாய்
வாழ்க்கையின் வழி காட்டியாய்
எண்ணங்களின் கண்ணாடியாய்!

புல்லாங்குழல் காற்றில் இசையாய் 
குறும்புகளில் ஓர் கதையாய்
மயிலிறகில் ஓர் கண்ணனாய்!

மேகத்தில் மறையும் நிலவாய்
வாடா நட்சத்திர பூவாய்  
வெண்ணெயையும் தாண்டிய வெண்மையாய்!

உடலைத் தாண்டிய ஆன்மாவாய் 
உடலைத் தாண்டிய வீரமாய்
உன் நாடகத்தில் நானும் ஒருவனாய்!

நீல நிறத்தில் ஓர் குழந்தையாய் 
அதர்மத்திற்கு எதிராய் தர்மமாய் 
கிருஷ்ண வேடமிட்ட மழலையாய்!

ஆயர்பாடியில் ஓர் கண்ணனாய்
லீலைகளில் ராச லீலையாய்
காதலை எல்லாம் ஆட்கொண்டவனாய்!

மரணம் எட்டாத என் ஆன்மாவாய் 
கிருஷ்ண ஜெயந்தி அவதாரமாய்
வெண்மை இதயங்களோடு வாழ்வாய்!

ஸ்ரீ ராம ஜெயம்!










அழகு மாறா விழிகள் | Alaku maara vilizhikal

Alaku
Alaku vilikal


அறிவியல் ஆர்வம் இல்லை 
ஆர்வம் இருந்திருந்தால் 
என்றோ சொல்லியிருப்பேன் 
கருப்பு வானவில் உன் புருவம் என்று!

விழிகளின் கவசமாய் இமை முடிகள் 
உன் விழி கூர் ஆயுதமாய் இருக்க 
எதிர் பார்வை சுடத் துடித்தேன்
என் கவசங்களோ வெற்று முடிகளாய்!

இயல்பிலே விழியோரம் கண்மை கொண்டு 
அழகு தேவதையாய் பூமியில் பிறந்தவள்
கண்மைக்கு உன் விழியோரம் வேலை இல்லை 
இயல்பாய் வசியமாய் வசிய மை கூடுதல் சிறப்பு!

புவி ஈர்ப்பு விசையையும் ஏமாற்றி 
உன் விழி ஈர்ப்பு விசையால் 
புவியில் விழுந்தது நிலவு என்று 
அறிவியலும் வரலாறும் நாளை மாறும்!

என்றும் அழகு மாறா உன் விழிகளுக்கு சமர்ப்பணம்!